புழுதிப்புயல்
வீசும்... பாலை செவ்வாய்...அமில மழை பொழியும்... அக்கினி வெள்ளி....இவற்றினின்று...பல்வேறு
விதங்களில் வேறுபட்டது - முற்றிலும் மாறுபட்டது-நமது பூமி !
அவற்றுள் ஒன்று...
ஏராளமாய் நிறைந்திருக்கும்...நீராதாரம்....எங்கிருந்து இவ்வளவு நீர் ?.....பூமிக்கு வந்திருக்கும் என்பது.... நாம் இதுவரைக்கும் முழுமையாய்...அறிந்திடாத ஓர் புதிர்..!
ஆதியில் புவியை
ஆக்கியப் பொருளிலிருந்தோ....அல்லது,பின்னாளில் தோன்றிய வேதி வினைகளிலிருந்தோ...அல்லது,
புற வெளியிலிருந்து பெய்திட்ட பெருமழையிலிருந்தோ....
இப்புவிக்கு நீரானது
வந்திருக்கலாம்.
கர்ராடு ( Comet
GARRADD ) வால்நட்சத்திரத்தில்
கண்டறியப்பட்ட நீர் மூலக்கூறுகள் சூரியக் குடும்பம் உருவாகிய
தருணத்தில்...ஏராளமான வால்நட்சத்திரங்கள்..எல்லா இடங்களிலும் மொய்த்துக்கொண்டிருந்தன....அவைகளுள்...பெரும்
நீர் சுமந்த வால்நட்சத்திரங்கள்...புவிக்கருகில் வந்தபோது,
ஈர்ப்புவிசையால் உள்ளிழுக்கப்பட்டு விழுந்ததால்...புவியில் நீர்
நிறைந்து...இன்றிருக்கும் பெருங்கடல்களும்,
சமுத்திரங்களும் தோன்றியிருக்கலாம்.
மேலும் அறிந்துகொள்ள....
Download : ISON ஐசான் Tamil-Poster11_DidCometsWetEarth.jpg (1.9MB)